புதிய தீவிரவாத தடுப்பு சட்டத்துக்கு நெடுமாறன் கடும் எதிர்ப்பு
சென்னை:
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பொடோ சட்டத்துக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
இச் சட்டம் ஜனநாயக விரோதமானது என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (திங்கள்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தீவிரவாதத்தைத் தடுக்க ஏற்கனவே பல சட்டங்கள் உள்ளன. இந் நிலையில் இந்தச் சட்டம் தேவையில்லாதது.
இந்தச் சட்டம் சிறுபான்மையினர், மனித உரிமைகளுக்காக போராடுபவர்கள், பத்திரிக்கையாளர்களின்சுதந்திர்ததுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.
இது மிசா சட்டத்தைவிடக் கொடுமையானது. நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்த இந்திரா காந்தி, மிசாசட்டத்தைக் கொண்டு யாரையெல்லாம் கொடுமைப்படுத்தினாரோ அவர்களே (பா.ஜ.க. தலைவர்கள்) தான்இப்போது பொடோ சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.
மிசாவின் கீழ் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வாஜ்பாய் ஆகியோர் கைது செய்யப்பட்டதை நாடு இன்னும்மறக்கவில்லை.
தடா சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வழக்குகள பதிவாயின. ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.ஆனால், இச் சட்டத்தின் கீழ் ஒரு சதவீத வழக்குகள் கூட நிரூபிக்கப்படவில்லை.
தீவிரவாதம் என்றால் என்ன என்று ஐக்கிய நாடுகள் சபையே இன்னும் தீர்மானிக்கவில்லை. இந் நிலையில்தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு மக்களின் அடிப்படை சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டத்தை அரசுகொண்டு வந்திருப்பது சரியல்ல.
இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.