பொடோவை அப்படியே ஏற்க முடியாது: கருணாநிதி
சென்னை:
பொடோ சட்டத்துக்கு திமுக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்தால் மட்டுமே அதை ஏற்க முடியும், இப்போதுள்ள நிலையில் அதை ஏற்கவேமுடியாது என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இச் சட்டத்துக்கு வரும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெற மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. இந் நிலையில் பா.ஜ.க.வின் முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுக எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுஇச் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இது குறித்து சென்னையில் திங்ள்கிழமை (இன்று) நிருபர்களிடம் கூறிய கருணாநிதி,
இந்தச் சட்டம் குறித்து நாடாமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும். இச் சட்டத்தை எந்த அரசும் முறைகோடகபயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். திடீரென சட்டம் கொண்டுவந்தால் அதை அப்படியே ஏற்க முடியாது.
தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை தான். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், இது குறித்துஅனைத்துக் கட்சிகளுடனும் பேசியிருக்க வேண்டும். சட்டத்தை அமலாக்கும் முன் இதற்கான நடவடிக்கைகளைபிரதமர் வாஜ்பாய் எடுக்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.