வாழப்பாடியை மீண்டும் காங்கிரசில் இணைக்க இளங்கோவன் முயற்சி
சென்னை:
வாழப்பாடி ராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சிதலைவர் இளங்கோவன்.
தமிழக காங்கிரசில் தனித்தனி கோஷ்டியாக இயங்கி வரும் முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துகாங்கிரசுக்கு பலம் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் இளங்கோவன்.
இதுவரை தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்த திண்டிவனம் ராமூர்த்தி, தங்கபாலு, அருணாசலம், குமரிஅனந்தன் மற்றும் அன்பரசு ஆகியோரை ஒருங்கிணைத்து விட்டார் இளங்கோவன்.
இந்நிலையில் காங்கிரசிலிருந்து பிரிந்து தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற தனி கட்சியை நடத்தி வரும் வாழப்பாடிராமமூர்த்தியை மீண்டும் காங்கிரசில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இளங்கோவன்.
சமீப காலமாக அதிமுக-காங்கிரஸ் உறவில் நட்புறவு நிலவவில்லை. நீண்ட காலத்திற்கு பின் மீண்டும்அதிமுகவுடனான நட்புறவை புதுப்பித்துக் கொண்டுள்ள வாழப்பாடி ராமமூர்த்தி தான் மீண்டும் காங்கிரசில்சேர்ந்தால் ஜெயலலிதாவின் கசப்புணர்ச்சிக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயத்திலும் இருக்கிறார்.
ஆனாலும் தான் காங்கிரசில் சேர்வதற்கு பல நிபந்தனைகளை விதித்துள்ளார் வாழப்பாடி ராமமூர்த்தி. அவரதுகோரிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது.
மேலிடத்திலிருந்து வரும் பதிலுக்கு பின் வாழப்பாடி ராமமூர்த்தி மீண்டும் காங்கிரசில் இணையலாம் என்றுதெரியவந்துள்ளது.