புலிகள்தான் பேச வர மறுக்கின்றனர் - இலங்கை
கொழும்பு:
இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது. ஆனால் அவர்கள்தான் அதற்கு வரமறுக்கிறார்கள் என்று அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகளை நாங்கள் ஆயுதங்களை எடுக்கக் கூடாது, போராடக் கூடாது என்று எந்த நிபந்தனையும்விதிக்கவில்லை. பேச்சுவார்த்தைக்குத் தான் அவர்களை அழைக்கிறோம்.
ஆனால் அவர்கள் அதற்கும் மறுக்கிறார்கள். இலங்கை அரசு அவர்களுடன் பேச்சவார்த்தை நடத்தி,பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆர்வமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருதரப்பிலும் எந்தவித நிபந்தனைகளையும்விதித்துக் கொள்ளாமல் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகப்பல நிபந்தனைகளை விதித்தார்கள்.
அதனால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. மேலும் நாங்கள் அளித்துள்ள சலுகைகளை ஏற்று நார்வே அரசின்அமைதி பேச்சுவார்த்தை முயற்சிக்கும் அவர்கள் வரமறுக்கிறார்கள்.
வடகிழக்கு மாகாணங்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு விடுதலைப்புலிகள் செய்தகாரியங்களால் எங்கள் அரசு கவிழ்ந்தது. இது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தான் லாபம்.
போராடுவது அவர்களின் ஜனநாயக உரிமை, அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால்பேச்சுவார்த்தைக்கு வரலாமே என்றார் சந்திரிகா.