For Daily Alerts
Just In
இந்திய கடற்படைத் தளபதியாகிறார் மத்வேந்திர சிங்
டெல்லி:
இந்தியாவின் புதிய கடற்படைத் தளபதியாக மத்வேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது துணை கடற்படைத் தளபதியாக இருக்கும் மத்வேந்திர சிங், முன்பு கொச்சியில் உள்ள தெற்கு மண்டலகடற்படைத் தலைவராக இருந்தார். மேற்கு மண்டல கடற்படைத் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
ரன்வீர், விராத், தல்வார் போன்ற போர்க் கப்பல்களை வழிநடத்திச் சென்றுள்ளார் மத்வேந்திர சிங்.
தற்போது கடற்படைத் தளபதியாக இருக்கும் சுசில் குமாருக்கு டிசம்பர் 29ம் தேதியுடன் பதவிக் காலம்முடிவடைகிறது. அன்றைய தினமே மத்வேந்திர சிங் புதிய கடற்படைத் தளபதியாகப் பதவி ஏற்றுக் கொள்வார்என்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Story first published: Tuesday, October 30, 2001, 5:30 [IST]