டான்சி நிலத்தை வாங்கியதில் தவறில்லை- ஜெ.வக்கீல் வாதம்
சென்னை:
சட்டப்படி அரசு சொத்துக்களை வாங்கத் தடை இல்லாவிட்டால், அரசு ஊழியர் அரசு சொத்துக்களை வாங்கலாம்.எனவே டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கியதில் தப்பில்லை என்று டான்சி வழக்கில் ஜெயலலிதாவின் வக்கீல்வாதாடினார்.
டான்சி மற்றும் கொடைக்காணல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்குகளின் அப்பீல் மனுக்கள் மீதான விசாரணைசென்னை உயர்நீதிமன்றத்ாதில் நீதிபதி தினகர் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தரப்பில் ஆஜராகி வாதாடிவரும் வேணுகோபால் தனது வாதத்தில்கூறியிருப்பதாவது,
டான்சி நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பும், சந்தை மதிப்பும் ஒன்றுதான். டான்சி நிலத்தில் உள்ள பிளாக் எண் 4,ஆலந்தூர் கிராமத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் வருகிறது. கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்தநிலம் ரூ.1.68 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முத்திரைத் தான் கட்டணமாக ரூ.3 லட்சம்வசூலிக்கப்பட்டுள்ளது.
பிளாக் எண் 4, பிளாக் எண் 5க்கு மிக அருகில் உள்ளது. 90ம் ஆண்டு அந்த நிலம் 1.68 லட்சத்திற்குவிற்கப்பட்டுள்ளது. 92ம் ஆண்டு ஜெயா பப்ளிகேணன்ஸ் ரூ.3லட்சம் கொடுத்துள்ளது. இது அதிகமானது தான்.
மேலும் டான்சி நிலத்தை விற்பது தொடர்பாக கடந்த 91ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி முடிசெய்யப்பட்டது. அதற்கு 2மாதங்கள் கழித்துத்தான் ஜெயலலிதா முதல்வரானார்.
இந்தியத் தண்டனைச் சட்டம் 169ன் படி அரசு ஊழியர் குறிப்பிட்ட அரசு சொத்துக்களை வாங்கக் கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது. சட்டப்படி அரசு சொத்துக்களை வாங்கத் தடை இல்லை என்றால், அரசு சொத்துக்களைவாங்கலாம்.
இவ்வாறு வக்கீல் வேணுகோபால் வாதாடினார்.