போக்குரத்து ஊழல் வழக்கு: சாட்சி பல்டி
சென்னை:
முன்ாள் அமைச்சர் செங்கோட்டையன் மீதான வழக்கில், சாட்சி திடீர் பல்டி அடித்ததால், அந்த வழக்கில் புதியதிருப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த அதிமுக அட்சிக்காலத்தில் ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்துக்கு உதிரிப்பாகங்கள் வாங்கியதில் ஊழல்செய்ததாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பலர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
சென்னை 3-வது தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகளை மீண்டும் குறுக்குவிசாரணை செய்ய அனுமதிகோரி மனுதாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அதற்கு நீதிபதி அன்பழகன் அனுமதிஅளித்தார்.
இதையடுத்து கடந்த 1993 முதல் 1996 வரை சென்னை போக்கவரத்துக் கழகப் பொது மேளாலராக இருந்ததண்டபாணி விசாரிக்கப்பட்டார்.
குறுக்கு விசாரணையின் போது அவர் அளித்த சாட்சியில்,
நான் பணியில் இருந்த போது, ஜெ.ஜெ. போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்ட அனைத்து உதிரிபாகங்களும்,டெண்டர் மூலமே வாங்கப்பட்டன. இதில் நடைமுறை ஒழுங்கீனங்கள் எதுவுமில்லை.
போலீசார் வற்புறுத்தியதால் நான் அவர்கள் சொல்வது போல வாக்குமூலம் கொடுத்து விட்டேன் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. இவரைப் போன்ற இன்னும் 2 சாட்சிகளும் குறுக்குவிசாரணை செய்யப்பட்டார்கள்.