For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கப்பலைத் தாக்கியது பழிக்குப் பழியே: புலிகள்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

எங்கள் படகுகளை தாக்கி, எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 பேரை கொன்றதற்கு பழி வாங்கும்நடவடிக்கையாகத்தான் கடற்படையின் எண்ணை கப்பலை தகர்த்து அழித்தோம் என்று விடுதலைப்புலிகள்அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை கப்பல் வடக்கு இலங்கை பகுதிக்கு எண்ணை ஏற்றிக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்றது.அப்போது விடுதலைபுலிகளின் தற்கொலை பிரிவினர் குண்டுகள் நிரம்பிய படகினால் அந்த கப்பல் மீது தாக்குதல்நடத்தினர். படகு வெடித்ததில் எண்ணை கப்பல் தீப்பிடித்தது.

கடற்படை வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த கப்பலில் சிக்கியிருந்த 13 கடற்படை வீரர்களையும், 12கப்பல் பணியாளர்களையும் மீட்டனர். 3 கடற்படை வீரர்கள் காணாமல் போய்விட்டனர்.

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று செவ்வாய்க்கிழமை இரவு விடுதலை புலிகளின் இயக்க ரேடியோ ஒலிபரப்பியசெய்தியில் கூறப்பட்டதாவது:

அக்டோபர் 2ம் தேதி பருத்தி துறையில் விடுதலை புலிகள் படகுகள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தியதாக்குலில் 20 புலிகள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குலுக்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே இலங்கைகடற்படையின் எண்ணெய் கப்பலை தகர்த்து அழித்தோம்.

எண்ணெய் கப்பல் மீது விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில், தற்கொலை படையைச்சேர்ந்த 4 பேர் இறந்து போனார்கள். இவர்களில் இரண்டு பேர் பெண் புலிகள் என்று கூறியுள்ளது.

சென்ற 2 தினங்களுக்கு முன் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரம நாயகேயை கொல்ல விடுதலை புலிகளின்தற்கொலை படையினர் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் (டிசம்பர்) 5ம் தேதி இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் விடுதலைபுலிகளின் தாக்குதல் அதிகமாகி வருவதால் இலங்கையில் பதட்டம் அதிகமாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X