For Daily Alerts
Just In
ஆந்த்ராக்ஸ் பீதியில் வத்தலக்குண்டு
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டத்தில் டுடோரியல் பள்ளி ஆசிரியருக்கு தபாலில் வெள்ளைப் பவுடர் வந்ததால் அங்குஆந்த்ராக்ஸ் பீதி கிளம்பியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு நகரில் டுடோரியல் பள்ளி வைத்திருப்பவர் முருகேசன். இவருக்குமும்பையிலிருந்து ஒரு பார்சல் தபால் வந்தது.
பார்சலைப் பிரித்துப் பார்த்த முருகேசன் அதனுள் வெள்ளைப் பவுடர் இருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.உடனடியாக அதை வத்தலகுண்டு காவல்நலையத்தில் ஒப்படைத்தார்.
போலீஸார், அது ஆந்த்ராக்ஸ் கிருமி உடைய பவுடராக இருக்கலாம் என்று கருதி, அந்தப் பவுடரை மதுரை அரசுராஜாஜி மருத்துவமனைக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தப் பவுடர் காரணமாக, நம்ம ஊரிலுமா ஆந்த்ராக்ஸ் என்ற பீதியில் வத்தலகுண்டு உறைந்து போயுள்ளது.
Comments
Story first published: Friday, November 2, 2001, 5:30 [IST]