For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளுக்குத் தனி நாடு தர ரணில் திட்டம்: சந்திரிகா புகார்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேயின் யுனைட்ட்ெ நேஷனல் பார்ட்டி ஆட்சிக்கு வந்தால், விடுதலைப் புலிகளுக்குதனி நாடு கொடுக்கத் திட்டமிட்டுள்ளது என அதிபர் சந்திரிகா குமாரதுங்கா குற்றம் சாட்டியுள்ளளார்.

இலங்கையில் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி பாராளுமன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேர்தல்பிரச்சாரத்தில் தற்போது அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இலங்கையில் ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா அனுராதபுரத்தில் பிரச்சாரம்செய்தார். அப்போது அவர் கூறியதாவது,

நடைபெறவிருக்கும் தேர்தல் இலங்கையில் நாட்டின் ஒற்றுமையும், இறையாண்மையும் நிலைத்து நிற்குமா நிற்காதாஎன்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும்.

எதிர்க்கட்சியான யுனைட்ட்ெ நேஷனல் பார்ட்டி ஆட்சிக்கு வந்தால் விடுதலைப்புலிகளுக்குத் தனி நாடு பிரித்துக்கொடுக்கும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, விடுதலைப்புலிகளுடன் ரகசியத் தொடர்பு வைத்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளைக் கூட்டணி சேர்த்துள்ள எதிரணியினர், நமது ஆட்சியை நீக்கிவிட்டு, விடுதலைப்புலிகள் தளபதிபிரபாகரன் விரும்பும் தலைவரின் ஆட்சியை எற்படுத்தப் போவதாக வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

விடுதலைப்புலிகள் தற்போது ஒரு வலிமையில்லாத தலைவர் நாட்டை ஆளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.அப்போதுதான் அவர்களால் வடக்குப் பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைத் தொடங்கி, பிறகு நாடுமுழுவதையும்தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இன்னம் 24 மணி நேரத்திற்குள், விடுதலைப்புலிகளுக்கு அவர்அளித்துள்ள வாக்குறுதிகள் பற்றி உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் தேர்தல் பிரச்சாரம்செய்வதற்கே தகுதியற்றவராகி விடுவார்.

இவ்வாறு சந்திரிகா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X