பொடாவுக்கு தடா கோருகிறார் ப.சிதம்பரம் கருத்து
சென்னை:
தடா சட்டத்தில் கூட இல்லாத அளவுக்கு கடுமையான அம்சங்கள் பொடா சட்டத்தில் இருப்பதால் அதை அமல்படுத்தக் கூடாது என்றுகாங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை பொடா சட்டமும், தகவல் தொடர்புத் துறையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்குப.சிதம்பரம் அனுப்பியிருந்த செய்தியில் கூறியிருப்பதாவது:
பொடா சட்டத்தில் உள்ள இரண்டு அம்சங்கள் தகவல் தொடர்புத் துறையினருக்குக் கவலை தரும் வகையில் உள்ளது. தங்களுக்குத் தெரிந்ததகவல்களை போலீஸாரிடம் தெரிவிக்காதவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை விதிக்கப்படலாம் என்று பொடா சட்டம் கூறுகிறது. இது பத்திரிகைசுதந்திரத்தைப் பாதிக்கும்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் சிவில் உரிமைகளைப் பாதிக்கும் வகையில் பொடாசட்டத்தின் பல அம்சங்கள் உள்ளன. தடா சட்டத்தில் கூட இவ்வளவு கடுமையான அம்சங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொடா சட்டம் தேவையில்லை என்று கூறியிருந்தார் ப.சிதம்பரம். கருத்தரங்கில் பேசியவர்களும் இதே கருத்தையே வலியுறுத்திப்பேசினர்.