அவமதிப்பு வழக்கு-தாமரைக்கனிக்கு எதிராக அரசு அப்பீல்
சென்னை:
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து தாமரைக்கனிவிடுவிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுதாக்கல் செய்துள்ளது.
1998ம் ஆண்டு மே மாதம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பஞ்சாயத்து ஒன்றிய கூட்டம்நடைபெற்றபோது தாமரைக்கனி பழங்குடி உறுப்பினர் ஒருவரை மரியாதை குறைவாகஅவமதித்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து தாமரைக்கனி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குதொடரப்பட்டது.
தான் பழங்குடி உறுப்பினரை அவமதிக்கவில்லை என்றும், தன் மீது வேண்டுமென்றேகுற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி தன்னை இந்த வழகிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றுமதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாமரைக்கனி மனு தாக்கல் செய்தார்.இதையடுத்து தாமரைக்கனி மீது தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்துமதுரை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்துதாமரைக்கனியை விடுவித்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தமிழக அரசுசென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், அப்பீல் மனுகுறித்து பதில் கூறுமாறு தாமரைக்கனிக்கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டார்.