நாடு கடத்தப்பட்ட ஜேவிபி தலைவர் இலங்கை வருகை
கொழும்பு:
இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஜனதா விமுக்திப் பெரமுனா இயக்கத் தலைவர் மீண்டும் இலங்கைக்கு வந்துதேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1989ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த போது, இவர் இலங்கையை விட்டு லண்டனுக்குத்தப்பிச் சென்று விட்டார். பிறகு அந்த இயக்கம் அரசியலில் ஈடுபட்டும் கூட, தண்டனைக்குப் பயந்து இலங்கைக்குவரமறுத்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது வரும் டிசம்பர் 5ம் தேதி இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது.அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள இவருக்கு சிறப்பு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பாஸ்போர்ட்டை வைத்து லண்டன் மற்றும் இலங்கைக்கு இடையில் தான் இவர் செல்லமுடியும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் இயக்கமான ஜனதா விமுக்தி பெரமுனா,சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணிக் கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது.
மேலும் இந்த 2 கட்சிகளும், எதிர்கட்சியான யுனைட்டெட் நேஷனல் பார்ட்டியின் தலைவர் ரணில் விக்கமசிங்கே,விடுதலைப்புலிகளுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் அமரசிங்கே இலங்கைக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.