For Daily Alerts
Just In
கருணாநிதி கண்டிக்காதது மர்மமாக உள்ளது என்கிறார் வாழப்பாடி
சென்னை:
ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் வந்ததை திமுக தலைவர் கருணாநிதி கண்டிக்காதது பல சந்தேகங்களைக்கிளப்புகிறது என தமிழக ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
யாருக்கு கொலை மிரட்டல் வந்தாலும் அதைக் கண்டிப்பது தான் மனிதாபிமான, அரசியல் நாகரீகமானசெயலாகும்.
ஆனால், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வந்துள்ள கொலை மிரட்டலைகருணாநிதி கண்டிக்கவில்லை. இதனால் இதில் ஏதாவது மர்மம் இருக்குமோ என்ற சந்தேகம் கிளம்புகிறது என்றுராமமூர்த்தி கூறியுள்ளார்.
Comments
Story first published: Monday, November 5, 2001, 5:30 [IST]