For Daily Alerts
Just In
பக்தவச்சலம் கமிஷன் பதவிக் காலம் நீட்டிப்பு
சென்னை:
சென்னை திமுக பேரணியில் நடந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி பக்தவச்சலம்கமிஷனின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திமுக நடத்திய பேரணி வன்முறையாக வெடித்தது. இதையடுத்து இந்த வன்முறை குறித்துவிசாரிப்பதற்காக தமிழக அரசு சார்பில், நீதிபதி பக்தவச்சலம் தலைமையிலான ஒரு நபர் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டது.
இந்த விசாரணைக் கமிஷனின் பதவிக் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பினரின் சாட்சியங்களையும் பெறும் வகையில் கமிஷனின் பதவிக் காலம் இந்த மாதம் 20ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story first published: Tuesday, November 6, 2001, 5:30 [IST]