முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எளிதான வெற்றி
ப்ளோயம்பான்டீன்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்கடுமையான தோல்வியைச் சந்தித்தது.
முதல் இன்னிங்சில் 379 ரன்களை இந்தியா குவித்த போதிலும், தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணியினர்இந்தியப் பந்து வீச்சாளர்களின் பந்துகளைச் சிதறடித்து, 563 ரன்கள் என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டினர்.
இதையடுத்து இந்திய அணியினர் வழக்கம்போல மிரட்சியுடன் விளையாடியதால், இரண்டாவது இன்னிங்சில்சோகமோ சோகம்.
முதலாவது இன்னிங்சில் சதமடித்த டெண்டுல்கரும் ஷேவாக்கும் இரண்டாவது இன்னிங்சில் அரை சதத்தைக் கூடஎட்ட முடியாமல் பெவிலியன் திரும்பினர். தாஸ் மட்டுமே அதிக பட்சமாக 62 ரன்களை எடுத்திருந்தார்.
இதனால் 237 ரன்களுக்கு இந்தியா இரண்டாவது இன்னிங்சை இழந்தது. இன்னும் ஒரு நாள் ஆட்டம்மீதமிருக்கையில் 54 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியினர் இரண்டாவதுஇன்னிங்சைத் துவங்கினர்.
எதிர்பார்த்தது போலவே, 14.4 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணியினர் வெற்றி இலக்கை எட்டினர்.இதற்குள் அவர்கள் ஒரு விக்கெட்டை இழந்ததை மட்டும்தான் எதிர்பார்க்கவில்லை.
இந்த டெஸ்ட்டில் 10 (6+4) விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பொல்லக்கிற்கு "ஆட்ட நாயகன்"விருது கிடைத்தது.