கடலூரில் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை
கடலூர்:
கடலூரில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை கன்னியத்தெருவில் வசித்துவருபவர் சந்திரன். இவர் சென்னைபோலீஸ் சி.ஐ.டி. அலுவலகத்தில் சூப்பிரண்டாகப் பணியாற்றிவருகிறார்.
இவருக்கு சுஜாதா என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவர்களில் சுஜாதா கடலூரில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம் ஒன்றில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு சுஜாதா தனது வீட்டில் உள்ள தனது கிளினிக் அறைக்குள் சென்று படிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். மறுநாள் காலையில் காபி கொடுக்க, எழுப்பும்போது அவர்எழுந்திருக்கவில்லை.
இதனால் சுஜாதாவின் உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரது உடலைப்பரிசோதித்த டாக்டர்கள், சுஜாதா இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்ட சுஜாதாவின் குடும்பத்தார்கதறி அழுதனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சுஜாதாவின் உடலைக்கைப்பற்றினார்கள். பிறகு முந்தைய நாள் அவர் படுத்திருந்த அறையைச் சோதனையிட்டபோது, அங்கு பாதிமருந்து உள்ள நிலையில் ஒரு சிரின்ஞ் கிடைத்தது. மேலும் சுஜாதாவின் கையிலும் ஊசி ஏற்றியதற்கான தழும்புஇருந்தது.
எனவே சுஜாதா விஷ ஊசிபோட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.தற்கொலைக்கான காரணம் என்ன என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக சுஜாதாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், கல்யாணத்தில் இஷ்டம்இல்லாததால் சுஜாதா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.