For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயிர் தந்து உயிர் தந்த வாலிபர்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

விபத்தில் பலியான ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களையும் வேறு இருவருக்கு நேற்று (திங்கள்கிழமை)வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர் மதுரை மருத்துவர்கள்.

ஆல்பர்ட் கென்னடி (30) என்ற வாலிபர் ஒரு விபத்தில் சிக்கி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். ஆனால் அவருடைய மூளை செயலிழந்து விட்டதால் அவர் இறந்து விட்டதாகஅறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து அவருடைய இரண்டு சிறுநீரகங்களையும் வேறு இரண்டு பேருக்கு மாற்ற டாக்டர்கள் முடிவுசெய்தனர்.

அதே மருத்துவமனையில் ஏற்கனவே நீரிழிவு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு சிறுநீரகம்தேவைப்பட்டது. அதேபோல் 20 வயதுப் பெண் ஒருவருக்கும் சிறுநீரகம் தேவைப்பட்டது.

இந்த மூவரின் இரத்த குரூப்பும் ஒன்றாக இருக்கவே, அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்து முடித்தமீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கே. சம்பத்குமார், இறந்து போன ஆல்பர்ட்டின் இரண்டுசிறுநீரகங்களையும் மற்ற இரண்டு பேருக்கும் பொருத்த முடிவு செய்தார்.

இதையடுத்து இவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆல்பர்ட்டின்சிறுநீரகங்களை மற்ற இருவருக்கும் வெற்றிகரமாக மாற்றினர்.

மதுரையில் ஒருவரின் சிறுநீரகம் ஒரே நேரத்தில் இருவருக்குப் பொறுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X