For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: அமெரிக்கத் தூதரகத்துக்கு மர்ம பார்சல் - ஆந்த்ராக்ஸா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு நேற்று ஒரு மர்ம பார்சல் வந்தததையடுத்து, அங்கு ஆந்த்ராக்ஸ்பீதி ஏற்பட்டது.

சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் அமெரிக்கத் தூதரகம் உள்ளது. இங்கு நேற்று(திங்கள்கிழமை) காலை 10.00 மணிக்கு ஒரு மர்ம பார்சல் வந்தது. அதில் தூதரக அதிகாரியின் முகவரி மட்டும்,தப்புத் தப்பாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், அதை அனுப்பியவரின் முகவரி அதில் எழுதப்படவில்லை.

எனவே அந்தப் பார்சலில், ஆந்த்ராக்ஸ் விஷக்கிருமி இருக்கலாம் என்று தூதரக அதிகாரிகள் சந்தேகப்பட்டு,அதைப் பிரிக்காமல் வைத்து விட்டனர். பின்னர் இதுகுறித்து சென்னை ராயப் பேட்டை போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர்.

உடனே போலீஸ் துணைக் கமிஷ்னர் வரதராஜூலு தலைமையில், ஒருபோலீஸ் படை தூதரகத்துக்கு விரைந்துவந்து, அந்த பார்சலில் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். பிறகு அதை மாதவரம்கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு, பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனால் நேற்று காலை சிறிது நேரம் அமெரிக்கத் தூதரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X