பாண்டிச்சேரி: அமைச்சர்கள் பதவியேற்பு விழா ரத்து
பாண்டிச்சேரி:
நாளை நடைபெறுவதாக இருந்த புதுவை அமைச்சர்கள் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 27ம் தேதி பாண்டிச்சேரியில் புதிய முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அப்போதுஅமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.
புதுவை காங்கிரஸ் கட்சியில், கண்ணன் தலைமையிலான புதுவை மக்கள் காங்கிரஸ் கட்சி 4 எம்.எல்.ஏக்களுடன்இணைந்தது. மேலும் 2 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் காங்கிரசில் இணைந்தனர். இதனால் 30 உறுப்பினர்களைக்கொண்ட பாண்டிச்சேரி சட்டமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் பலம் 17 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் 3 அமைச்சர்கள் நாளை (புதன்கிழமை) பதவியேற்பதாக, முதல்வர் ரங்கசாமி, புதுவை துணை நிலையஆளுநர் ரஜனி ராயிடம் கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுவந்தன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு 2 அமைச்சர் பதவியும், கண்ணன் கட்சியிலிருந்து வந்தவர்களில்ஒருவருக்கு அமைச்சர் பதவியும் அளிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இன்று திடீரென பதவியேற்பு விழா ரத்துசெய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமனத்தில்ஏற்பட்டுள்ள சிக்கலை அடுத்து, பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பதவியேற்பு விழாவிற்கான மறுதேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.