தீவிர நக்சலைட் வேட்டையில் தமிழக போலீஸ்
சென்னை:
நக்சலைட் அமைப்புக்களான தமிழர் தேசிய மீட்புப் படை மற்றும் தமிழக விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்தநக்சலைட்களை கைது செய்வதில் தமிழக போலீஸார் மும்முரமாகியுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இ-மெயிலில் தமிழக விடுதலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள்கொலை மிரட்டல் அனுப்பியிருந்தனர்.
இதையடுத்து போலீஸார் ஜெயலலிதாவுக்கு வந்த கொலை மிரட்டலை அனுப்பியது யார் என்று தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 2 பேர் போலீஸ் கஸ்டடியில் தற்போது உள்ளனர்.
இந்த நிலையில் இரு நக்சலைட் அமைப்புகளும் தடை செய்யப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்செவ்வாய்க்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக நடந்த அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பன்னீர் செல்வம் கூறுகையில்,
இந்த இரு அமைப்புகளையும் தடை செய்வது குறித்து கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இந்த இரு அமைப்புகளையும் தடை செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளது என்றார்.
தமிழக அரசின் முடிவையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கையில்போலீஸார் இறங்கியுள்ளனர்.
தற்போது தமிழக விடுதலைப் படையின் தலைவர் மாறன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுசிறையில் உள்ளனர். இந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் 4 முக்கிய நக்சலைட்களை போலீஸார் தேடி வருகின்றன