For Daily Alerts
Just In
இந்தியாவில் ஆந்த்ராக்ஸ் இல்லை: மத்திய அமைச்சர் சொல்கிறார்
சென்னை:
இந்தியாவில் எந்த பகுதியிலும் ஆந்த்ராக்ஸ் விஷக் கிருமி பரவவில்லை என்று மத்தியசுகாதரத்துறை இணை அமைச்சர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் எச் ராஜா நிருபர்களிடம் கூறுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும்ஆந்த்ராக்ஸ் விஷக் கிருமி பரவவில்லை.
தபால் மூலமாக ஆந்த்ராக்ஸ் விஷக் கிருமி பரவுவதாக மக்கள் பீதி பரவி வருகிறது.ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாவாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் பரிசோதனைசெய்யப்பட்ட பவுடர்களில் அப்படிப்பட்ட கிருமி ஏதும் இல்லை என்று பின்தெரியவந்தது. எனவே மக்கள் யாரும் பயம் கொள்ள வேண்டாம்.
ஆந்த்ராக்ஸ் கிருமி நம் நாட்டில் பரவவில்லை என்றாலும், ஆந்த்ராக்ஸ் கிருமிபரவினால் அதை தடுக்க தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மத்தியஅரசு எடுத்து வருகிறது என்றார்.
Comments
Story first published: Thursday, November 8, 2001, 5:30 [IST]