For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சேலத்தை கலங்கடிக்கும் பெண் சிசுக் கொலைகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் பெண் சிசுக் கொலை தலைவிரித்தாடுகிறது.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் சிசுக் கொலை உச்சகட்டத்தில்இருந்தது. இதையடுத்து அரசுத் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து மதுரை மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை சம்பவங்கள் குறையத் தொடங்கின. தர்மபுரியிலும் குறைந்தன. ஆனால்சேலத்தில் மட்டும் பெண் சிசுக் கொலை பயங்கர வேகத்தில் நடக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர், தராமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட 10 தாலுகாக்களில் பெண் சிசுக் கொலைகள் அதிக அளவில்நடப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இங்கு அரசு எடுத்த எந்த நடவடிக்கையும் பலனளிக்கவில்லை.

சம்பந்தப்பட்ட தாலுகாக்களில் தற்போது 1000 ஆண்களுக்கு 900 பெண்களே உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 1580 பெண்சிசுக்கள் கொல்லப்பட்டுள்ளன. இவற்றில் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சிசுக்களின் எண்ணிக்கை 68 சதவீதம்.

தொட்டில் குழந்தைத் திட்டத்தை அப்போதைய ஜெயலலிதா அரசு முதலில் சேலத்தில்தான் துவக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் தொட்டில் குழந்தைத் திட்டத்தை பல பெண்கள் கண்டுகொள்ளவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X