For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநாதபுரம்: ரூ.11 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் - 4 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் கியூபிராஞ்ச் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரூ.11 லட்சம் கள்ள நோட்டுக்களைப்பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மூலக்கொத்தளம் என்ற இடத்தில் கியூ பிராஞ்ச் டி.எஸ்.பி.சந்திரசேகரன் தலைமையில்போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா சுமோவை நிறுத்தி,சோதனை செய்தனர்.

காரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனே போலீசார் கள்ள நோட்டுக்களைக் கைப்பற்றியதுடன், காரில் வந்த விருதுநகர் ஈஸ்வரன், திண்டுக்கல் சபர்உல்லா, கடலூர் நாராயணசாமி ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில், இதேபோல 100 ரூபாய் கள்ள நோட்டுக்களை பெரம்பலூர், திருச்சி, ஈரோடு,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில், பெரம்பலூரில் திருமாவளவன் என்பவர் வைத்திருந்த ரூ.6 லட்சம்மதிப்புள்ள கள்ள நோட்டுக்களையும், ரூ.8 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுத் தயாரிக்கும் இயந்திரங்களையும்போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும், ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நல்லதம்பி முன்புஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 4 பேரையும், 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X