For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாள விமானத்தைக் கடத்தி டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

காத்மண்டு:

நேபாள நாட்டில் உள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து விமானத்தைக் கடத்தி, டெல்லியில் உள்ள பிரதமர்அலுவலகக் கட்டிடம் அல்லது அவரது வீட்டில் தாக்குதல் நடத்துவதற்கு பின்லேடனின் ஆட்கள் திட்டமிட்டுள்ளதுதெரியவந்துள்ளது.

இதுகுறித்து இன்று (வெள்ளிக்கிழமை)அந்நாட்டு விமானப் போக்குவரத்துத்துறை செயலாளர் விஷ்ணு சுபேதிகூறுகையில்,

சென்னை விமானப் போக்குவத்துறை அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின்லேடனின் ஆட்கள் காத்மண்டுவில் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் நேபாளவிமானங்களைக் கடத்தி, டெல்லியில் உள்ள முக்கியக் கட்டடங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளததாகவும்கூறப்பட்டிருந்தது.

டெல்லியில் பிரதமர் அலுவலகத்தின் மீதோ அல்லது அவரது இல்லதத்தின் மீதோ தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதுஎன்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு சில மர்ம ஆசாமிகளிடம் இருந்து, மிரட்டல் கடிதம்வந்துள்ளது. இந்தக் கடிதம் குறித்து நாங்கள், காத்மண்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பும் 13 விமானங்களின்பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உடனே தெரிவித்துவிட்டோம்.

இந்த மிரட்டல் உண்மையாகவோ அல்லது வதந்தியாகவோ இருக்கலாம். இருப்பினும் இதுபோன்ற பதட்டமானசூழ்நிலைகளில் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

இதுகுறித்து ராயல் நேபாள் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ராஜ் கூறுகையில்,

இந்த மிரட்டல் குறித்த தகவல் வந்தவுடன் நாங்கள் எங்கள் விமானங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்திவிட்டோம்.

உண்மையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு எங்கள்விமானங்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம் என்றார்.

கடந்த 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்சுக்குச் சொந்தமான ஐ.சி.184 ரக விமானத்தை, காஷ்மீர் தீவிரவாதிகள்காத்மண்டுவிலிருந்து கடத்தி, ஆப்கானிஸ்தானில் உள்ள காண்டஹரில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X