For Daily Alerts
Just In
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
சென்னை:
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம் பாக்கம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
குன்றத்தூரைச் சேர்ந்தவர்கள் கீரண், ரஷீத் கபூர். நண்பர்களான இவர்கள் 10ம் வகுப்பு படித்து வந்தார்கள்.
தங்களது மற்ற நண்பர்களுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இவர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது ரஷீத்தும்,கீரணும் தவறுதலாக நீரில் மூழ்கி விட்டனர்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு அவர்களது உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
Comments
Story first published: Friday, November 9, 2001, 5:30 [IST]