தஞ்சையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே கடன் தொல்லை காரணமாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டிணம் அருகே உள்ள தில்லை நகரைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவர் தனது தாய்இந்திரா, மகன் கண்ணன், மகள் கலா ஆகியோருடன் வசித்து வந்தார்.
மனோன்மணியின் முதல் கணவர் ரங்கசாமி, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து சென்றுவிட்டார்.இயைடுத்து, மனோன்மணிக்கும் சுப்பையா என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. சுப்பையா தற்போதுமலேசியாவில் வேலை பார்த்து வருகிறார்.
கண்ணன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் இருந்து வந்தார். இதில் பல பேரிடம் பணம்வாங்கிவிட்டு, அவர்களை வேலைக்கும் அனுப்பவும் முடியாமல், பணத்தைத் திரும்பத் தரவும் முடியாமல் திண்டாடிஇருக்கிறார்.
ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி, சென்னைக்கு சென்று விட்டார்.
பல மாதங்களாகியும் கண்ணனிடம் இருந்து, தகவல் ஏதும் வரவில்லை. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள்மனோன்மணியிடம் நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர். இதனால் மனமுடைந்த மனோன்மணி குடும்பத்தினர்தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்தனர்.
கடந்த புதன்கிழமை இரவு, மனோன்மணி, அவரது தாய் இந்திரா, மகள் கலா ஆகிய 3 பெண்களும் தங்களதுவீட்டிற்குள் வரிசையாக தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி.விஜயகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.