For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளுக்கு கனடா தடை: சந்திரிகா வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து, அதன் சொத்துக்களை முடக்க முடிவெடுத்துள்ளகனடா அரசின் முடிவை, இலங்கை அதிபர் சந்திரிகா வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து இன்று (சனிக்கிழமை) நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது அவர் மேலும் அவர் கூறியதாவது,

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து, அதற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.மேலும் இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தக்க நேரத்தில்எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். இதை நான் வரவேற்கிறேன்.

கனாடாவில் வசிக்கும் 1,50,000 க்கும் மேற்பட்ட தமிழர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் நிதியுதவிபெற்றுவந்தார்கள். தற்போது அந்நாட்டில் இந்த இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பது கனடாவில் வசிக்கும்தமிழர்களுக்கும் வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

விடுதலைப் புலிகளின் தாக்குதலைப் பொறுத்துக்கொண்டு, தமிழர்கள் மீது பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்அமைதிகாத்து வந்த சிங்கள மக்களுக்கும் இது பெரிய வெற்றிதான்.

கனடா அரசு தற்போது எடுத்திருக்கும் முடிவு, விடுதலைப் புலிகளை ஒடுக்க எனது தலைமையிலான அரசு எடுத்தநடவடிக்கைகளுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் லஷ்மண் கதிர்காமரின் உழைப்புக்கும் கிடைத்தவெற்றியாகும்.

இவ்வாறு அதிபர் சந்திரிகா, தனது பேட்டியில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X