இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டுகள்: அப்துல் கலாம்
டெல்லி:
இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டுகள் உள்ளன என்று பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்து ராஜினாமாசெய்யும் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியுள்ளார்.
1998 பொக்ரான் அணுகுண்டுச் சோதனை எங்களுக்குத் திருப்திகரமாக இருந்தது. ஆனாலும் மற்ற நாடுகளைவிடஅணு ஆயுதங்களைப் பாதுகாக்கும் முறை நம்மிடம் உள்ளன. நம்மிடம் உள்ள அணு ஆயுதங்கள் பாதுகாப்பாகவும்உள்ளன.
2,200 கி.மீ. தூரம் சென்று தாக்கவல்ல அக்னி ஏவுகணையை விட அதிக தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளைநம்மால் தயாரிக்க முடியும். ஆனால் தற்போது அதற்கு அவசியமில்லை. தேவைப்பட்டால் அதையும் தயாரிக்கும்திறமை நம்மிடம் உள்ளது.
இந்திய இளைஞர்களிடையே அறிவியல் கலாச்சாரத்தை உருவாக்கி, அதன் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நான் இப்பதவியை ராஜினாமா செய்கிறேன்.
வடக்கே அசாம் முதல் தெற்கே திண்டுக்கல் வரை நாடு முழுவதும் 15,000 இளைஞர்களுடன் தொடர்புவைத்துள்ளேன். அவர்களுடைய அறிவியல் ஆர்வத்தை விரைவில் வெளிப்படுத்திக் கொண்டு வருவேன்.
மாற்றங்கள் மனிதனின் அன்றாட வாழ்வில் தேவையான ஒன்று. மாற்றம் கிடைத்தால் அவனால் மேலும் சிறப்பாகப்பணியாற்ற முடியும் என்றார் அப்துல் கலாம்.
1997ம் ஆண்டு "ரத்னா விருது" பெற்ற அப்துல் கலாம், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் கடந்த 43ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளார்.