குடும்பத்துடன் போராட பஸ் ஊழியர்கள் முடிவு
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அடுத்த கட்டமாக குடும்பத்துடன் போராட்டத்தில் இறங்கப் போவதாகஅறிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் வழங்கப்படும் 20 சதவீத போனஸ் கேட்டு, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடந்த 3 நாட்களாகவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து 3வது நாளான நேற்று (திங்கள்கிழமை) போக்குவரத்துக் கழகஊழியர்கள் கூடி விவாதித்தனர்.
தொ.மு.ச. பேரவை தலைமையகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்களில் சென்னையைச் சேர்ந்த ஹரிபாபு என்ற நடத்துனர்சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசுக்கு போராட்டக்குழுகண்டனத்தைத் தெரிவிக்கிறது. மறைந்த தோழருக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களில் நேற்று மட்டும் 4,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்த கைது எண்ணிக்கை 8,000 ஐ தாண்டியுள்ளது.
தொழிலாளர்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, அரசு உடனே 20 சதவீத போனஸ் வழங்கஉத்தரவிட வேண்டும். வீண் பிடிவாதத்தையும், வீம்பையும் கைவிட வேண்டும்.
இல்லையேல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும். அடுத்த கட்டமாக குடும்பத்துடன் போராடமுடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.