தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
சென்னை:
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் மற்றும் தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் நெரிசல் அதிகம் இருப்பதால்மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே மூன்று நாட்களுக்குஇயக்கவுள்ளது.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்துஇன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு ரயில் மதுரை புறப்பட்டுச் சென்றது. இரவு 10.15மணிக்கு இந்த ரயில் மதுரையை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் இந்த ரயில் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி அன்று இரவு10.15 மணிக்கு சென்னையை வந்தடையும்.
இதேபோல திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல, நாகர்கோவிலிருந்து நெல்லை மற்றும் திருவனந்தபுரத்திற்கு 2 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.