For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்று (வியாழக்கிழமை) முதல் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடைய குடும்பத்துப் பெண்களும் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இப்பெண்கள் இன்று காலையிலேயே மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நூற்றுக்கணக்கான பெண்கள் ஆங்காங்கே சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனால் தனியார்-மினி பஸ் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மக்கள் எந்த பஸ்சும் கிடைக்காமல்பெரும் அவதிப்பட்டனர்.

இதையடுத்து, அந்நகரங்களில் பெரும் பதட்டம் நிலவி வருவதால், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஏராளமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள்அறிவித்துள்ளன.

இந்தப் பெண்களும் கைதாவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X