தமிழகத்துக்குத் தண்ணீர் தர கேரளம் மறுப்பு
திருவனந்தபுரம்:
தமிழ்நாட்டில் கட்டப்பட்டுவரும் மேக்கரா அணைக்கு அச்சங்கோவில் மற்றும் பம்பா நதிகளில் இருந்து தண்ணீர் தரமுடியாது என்று கேரள முதல்வர் ஏ.கே.அந்தோனி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் செங்கோட்டைக்கு அருகே மேக்காரா என்ற புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இந்த அணைக்குகேரளாவில் ஓடும் அச்சங்கோவில் மற்றும் பம்பா நதிகளில் இருந்து நீரைத் திருப்பிவிட கேரள அரசின்அனுமதியை தேசிய நீர்வளர்ச்சி ஆணையத்தின் மூலம் தமிழக அரசு கேட்டிருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கேரள முதல்வர் அந்தோனி அம்மாநில சட்டசபையில் கூறினார். அர்கூறுகையில்,
தமிழ்நாட்டில் ஓடும் ஹனுமன் நதிக்குக் குறுக்கே செங்கோட்டைக்கு அருகில் மேக்காரா என்ற அணை கட்டப்பட்டுவருகிறது. இந்த அனைக்கு அச்சங்கோயில் மற்றும் பம்பா நதிகளில் இருந்து டனல் மூலமாக நீரை எடுத்துச் செல்லதேசிய நீர்வளர்ச்சி ஆணையம் நம்மிடம் அனுமதி கேட்டது.
இதற்கு கேரள அரசு சார்பில் தண்ணீர் தர முடியாது என்று அரசு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த அணை தமிழ்நாட்டின் எல்லைக்குள் கட்டப்பட்டு வருவதால், நாம் அதில் தலையிட முடியாது.
மேலும் கிரியாறு திட்டம் தொடர்பாக நமது மாநில எல்லைக்குள் சர்வே நடத்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின்கோரிக்கையையும் அரசு நிராகரித்துள்ளது.
மேக்காரா அணை விவகாரம் குறித்த விவாதிக்க தேசிய நீர்வளர்ச்சி ஆணையம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில்கேரளவிலிருந்து யாரும் அழைக்கப்படவில்லை. இதுறித்து விசாரணை செய்யப்படும்.
இவ்வாறு அந்தோனி சட்டசபையில் கூறினார்.