For Daily Alerts
Just In
தற்காலிக டிரைவருக்கு இன்னொருவர் பலி
சென்னை:
சென்னை அருகே மாமல்லபுரத்தில் பயிற்சி பெறாத டிரைவர் ஓட்டி வந்த அரசு பஸ் மோதியதில் ஆட்டோ டிரைவர்மரணமடைந்தார். 2 பெண்கள் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு புதன்கிழமை இரவு ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஓட்டிவந்தார். பஸ் மாமல்லபுரம் அருகே வந்தபோது ஆட்டோ ஒன்றின் மீது மோதியது.
இதில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஆட்டோவில் பயணம் செய்த 2 பெண்களும் காயமடைந்தனர்.இருவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேபோல கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளான பஸ்ஸை ஓட்டியவர் தற்காலிக டிரைவர்தான். மேலும் ராமநாதபுரத்தில்எதிரே வந்த பேருந்துடன் மோதிக் கவிழ்ந்த பேருந்தை ஓட்டியவரும் தற்காலிக டிரைவர் என்று தான் கூறப்படுகிறது.
Comments
Story first published: Thursday, November 15, 2001, 5:30 [IST]