For Quick Alerts
For Daily Alerts
Just In
பூக்களுடன் ஒரு தீபாவளி
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் போலீஸ் அதிகாரிகள் தீபாவளிகொண்டாடினார்கள்.
ஒரு பாவமும் அறியாத இந்தக் குழந்தைகளுக்கு தந்தை, தாய் மூலமாக இந்த நோய் பரவியுள்ளது. இந்தஅப்பாவிக் குழந்தைகளுக்கு ஆறுதல் தரும் வகையில் இந் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விழவில் கலந்துகொண்டு பேசிய அனைவரும், ஒருபாவமும் அறியாமல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டகுழந்தைகளின் எதிர்கால வாழ்வில் ஒளியேற்ற அனைவரும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்றுகேட்டுக்கொண்டனர்.
விழாவில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போலீசாரும் நூற்றுக்கணக்கான பொது மக்களும் பொது நல அமைப்புகளும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Thursday, November 15, 2001, 5:30 [IST]