For Daily Alerts
Just In
இது பச்சிளம் குழந்தைகள் வாரம் !
சென்னை:
தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் வாரம் வெள்ளிக்கிழமை துவங்கியது.
புதிதாக பிறந்த குழந்தைகளை சிறப்பாக பராமரிப்பது தொடர்பான வாரம் இது. இந்த வாரத்தின்போது புதிதாக பிறந்தகுழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்பது குறித்த பிரசாரம் மாநிலம் முழுவதிலும் அரசு மற்றும் தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும்.
இந்த வாரத்தை சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை துவக்கி வைத்தார்.மின்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு குறித்த கையேட்டை அமைச்சர் செம்மலை வெளியிட்டார்.
Comments
Story first published: Friday, November 16, 2001, 5:30 [IST]