சுறா மீன் பிடிக்கத் தடையா? ஜெ. கோபம்
சென்னை:
சுறா உள்பட கடலில் 53 வகையான மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தத் தடைகளை நீக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு இணை அமைச்சராக உள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குஜெயலலிதா இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
இது தமிழக மீனவர்களை மிகவும் பாதிக்கும். ஏற்கனவே மீனவர்கள் பெரும் தொல்லைகளை சந்தித்து வரும்நிலையில் இந்த உத்தரவு பெரும் இடியாக வந்துள்ளது.
சிலர் கொடுத்த தவறான ஆலோசனையின்பேரில் மத்திய பா.ஜ.க. அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதனால் தமிழத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகும்.
இது போன்ற மீனவர்களுக்கு எதிரான உத்தரவு வருவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு தான் காரணம்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தத் தடை உத்தரவை இரு வாரங்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டது. சுறா போன்ற அழிந்து வரும் மீன்இனங்களைக் காக்கவும், சங்குகள், சிப்பிகளைக் காக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசுகூறியிருந்தது.