வால் நட்சத்திரம்: இந்திய செயற்கைக் கோள்கள் தப்புமா?
பெங்களூர்:
வானில் லியோனாய்டு என்ற வால் நட்சத்திரத்திலிருந்து விழும் எரிகற்கள் நமது செயற்கைக் கோள்கள் மீதுவிழாமல் தடுக்க தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன என்று இந்திய வின்வெளிஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் பல செயற்கைக் கோள்களை ஆராய்ச்சிக்காகவும் தொலைத்தொடர்புக்காகவும் விண்ணில் செலுத்தியுள்ளது.
லியோனாய்டு என்ற வால் நட்சத்திரத்திலிருந்து விழும் எரிகற்கள் வரும் 18ம் தேதி செயற்கைக் கோள்களைத்தாக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
33 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த லியோனாய்டு சூரியனுக்கு மிக அருகில் செல்லும். அப்போது உண்டாகும்வெப்பத்தில் வால் நட்சத்திரத்தின் வால் பகுதியில் உள்ள ஐஸ் மற்றும் அதிலுள்ள தூசு போன்ற பொருட்கள்அதிலிருந்து பிரிந்து கற்கள் போல விழும். இந்த எரிகற்கள் செயற்கைக் கோள்கள் மீது விழுந்தால், அதிலுள்ளசோலார் செல்கள் மற்றும் கண்ணாடிப் பாகங்களை சேதப்படுத்திவிடும்.
சில சமயங்களில் செயற்கைக் கோள்களில் அதிர்வுகளையும் ஏற்படுத்திவிடும். மேலும் மின் மாற்றங்களைஏற்படுத்துவதோடு, செயற்கைக்கோள்களில் உள்ள மைக்ரோ பிராசஸர்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளது.
இதிலிருந்து செயற்கைக் கோள்களைப் பாதுகாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ பலமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய செயற்கைக் கோள்களில் உள்ள கேமராக்கள், பதிவுக்கருவிகளை இந்த எரிகல் தாக்குதலின்போது இயக்காமல் நிறுத்திவிடத் திட்டமிட்டுள்ளது.
மேலும் எரிகற்கள் விழும்போது, செயற்கைக் கோளின் சோலார் தகடுகள் மீது கற்கள் விழுாமல் தடுக்க அவைதானாக பக்கவாட்டில் திரும்பிக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற செயல்கள் மூலம் அதிகபட்சம் 10 மணி நேரத்திற்கு தொடர்ந்து கற்கள் விழுந்தாலும், அவைசெயற்கைக் கோள்களின் மீது பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்க முடியும்.
இந்த எரிகற்கள் வரும் 18ம் தேதி மாலை 2.30 மணி முதல் 3.30 வரையும், பிறகு மீண்டும் இரவு 10.30 மணி முதல்11.30 மணி வரையும் அதிகமாக விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.