For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு பஸ்களை தனியார் மயமாக்க கி.வீரமணி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போக்குவரத்துத் தொழிலாளர்களையும் பங்குதாரர்களாக்கி, அரசு பஸ்களை தனியார் மயமாக்க வேண்டும் என்றுதிராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்கூறியிருப்பதாவது,

அரசு பஸ்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்றும், இந்த ஆண்டு ரூ. 2,035 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும்போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகிறார். இதேபோல கடந்த ஆட்சியிலும் நஷ்டக் கணக்குதான் காட்டப்பட்டது.

தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் லாபத்தில் ஓடும்போது, அரசு பஸ்கள் மட்டும் நஷ்டத்தில் ஏன் இயங்கவேண்டும் என்பது தான் அனைவரும் கேட்கும் கேள்வி.

இதற்கு ஒரு முடிவு காணும் பொருட்டு, அதிமுக அரசு துணிச்சலுடன் பஸ்கள் அரசுடமை திட்டத்தைப் பற்றி மாற்றுமுடிவு எடுக்க வேண்டும்.

இதை அரசு நடத்துவதை நிறுத்திவிட்டு தனியார்களுக்கு விதிப்பதைப் போல பஸ் சீட்டுக்களின் எண்ணிக்கையைக்கணக்கிட்டு வரிவிதித்து தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.

தனியார் மயம் என்று அதிக லாபம் தரும் துறைகளைக் கூட மத்திய அரசு அடிமாட்டு விலைக்கு தனியாருக்குவிற்றுவிடுகிறது. தமிழக அதிமுக அரசு அப்படிச் செய்யாமல் பஸ் தொழிலாளர்களையே முதலாளியாக்கும்திட்டத்தை திறந்த முறையில் அறிவிக்கலாம்.

அவர்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் 3 முதல் 5 பஸ்களை அளிக்கலாம். அவர்களுக்கு ஏதுமூலதனம் என்ற கேள்வி எழுமானால், தேசியமயமான வங்கிகள் இப்போது எப்படி பஸ்கள் மீது தனியாருக்குகுறைந்த வட்டி விகிதத்திற்கு முன்பணம் கடனாகத் தருகிறார்களோ, அதே முறையைத் திட்டமிட்டு பின்பற்றச்செய்யலாம்.

தற்போது தனியார் துறையில் பஸ்கள் இல்லையா?. அவை லாபகரமாக இயங்கும்போது, இப்படி "புலிவால் பிடித்தநாயர் " கதைபோல தமிழ்நாடு அரசும் திணற வேண்டுமா?.

ஊழல், வழக்கு, சங்கடங்கள் எதுவுமே வராது. ஆம்னி பஸ்கள் ஏராளம் ஓடுகின்றன. மினி பஸ்கள் திமுக ஆட்சியில்ஏராளம் அனுமதி கொடுத்து ஓடிக்கொண்டுள்ள நிலையில், இந்தப் பகுதியையும் நாட்டுடமை ஆக்குவதில் என்னதவறு?

அரசு பஸ்களை தனியாருக்கு மாற்ற முடிவெடுக்கும் துணிவுடன் அதிமுக தலைமையும் அரசும் வரவேண்டும். அரசுபோக்குவரத்துத் துறையில் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதைவிட பங்காளி-முதலாளி ஆக்குவது தவறல்ல-பிற்போக்காகாது.

இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X