23ம் தேதி பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு பஸ் ஊழியர் சங்கங்கள் அழைப்பு
சென்னை:
தாங்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, அனைத்து தமிழக அரசு ஊழியர்களும்வரும் 23ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொது வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழகஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
மாநிலம் முழுவதுமுள்ள 50 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் தங்களுக்குஆதரவு தெரிவித்து 23ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்சங்கங்கள் நம்பிக்கையும் தெரிவித்துள்ளன.
இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களையும் சந்திக்கப்போவதாக சி.ஐ.டி.யூ. சங்கத் தலைவர் டி.கே. ரங்கராஜன் கூறினார்.
மேலும், தங்களுடைய கோரிக்கைகள் குறித்தும், அவைகளுக்கு அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதுகுறித்தும் பொது மக்களிடம் விளக்கிக் கூறுவதற்காக வரும் 20ம் தேதி பொதுக் கூட்டம் நடத்தப் போவதாகவும்ரங்கராஜன் தெரிவித்தார்.
அரசிடம் பேச எங்களுக்கு எந்தவிதத் தயக்கமும் பயமும் கிடையாது. ஆனால், அரசு தொடர்ந்து சொன்னதையேசொல்லிக் கொண்டிருந்தால் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் கிடையாது என்பதால்தான் பேச்சுவார்த்தையில்எங்களுக்கு உடன்பாடில்லை என்று கூறுகிறோம் என்று திமுக எம்.பியான செ. குப்புசாமி கூறினார்.
8.33 சதவீதத்திற்குப் பதில் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 20,000ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்போக்குவரத்து ஊழியர்கள்.