For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவை: 21ம் தேதி பெரும்பான்மையை நிருபிக்கிறார் ரங்கசாமி

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை வரும் 21ம் தேதி பெரும்பான்மையைநிரூபிக்க உள்ளது என்று அம்மாநில தலைமைச் செயலாளர் சிவப்பிரகாசம் கூறினார்.

பாண்டிச்சேரியில் முதல்வராக இருந்த சண்முகம் குறிப்பிட்ட 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏவாக முடியாமல்போனதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதுவை காங்கிரஸ் தலைவர்களில்ஒருவரான ரங்கசாமி கடந்த அக்டோபர் 27ம் தேதி புதிய முதல்வராகப் பதவியேற்றார். மேலும் கடந்த 11ம் தேதிமூன்று அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

ரங்கசாமி பதவியேற்றுக் கொண்ட ஒரு மாத காலத்திற்குள் சட்டசபையில் தனது கட்சிக்குள்ள பெரும்பான்மையைநிருபிக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னர் உத்தரவிட்டிருந்தார்.

30 பேர் கொண்ட பாண்டிச்சேரி சட்டசபையில் தற்போது காங்கிரசுக்கு 15 எம்.எல்ஏக்கள் உள்ளனர். மேலும்இரண்டு சுயேச்சைகளும், த.மா.காவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்களும் ரங்கசாமியின் அமைச்சரவைக்குஆதரவளித்துள்ளனர்.

இந்நிலையில் ரங்கசாமி சட்டசபையில் தனது அமைச்சரவைக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று வரும் 21ம்தேதி நிருபிக்க இருக்கிறார் என்று பாண்டிச்சேரி தலைமைச் செயலாளர் சிவப்பிரகாசம் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் காங்கிரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக வாபஸ்பெற்றுக்கொண்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X