For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் வந்த 11 இலங்கை தமிழ் அகதிகள்
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து நேற்று 11 தமிழ் அகதிகள் ராமேஸ்வரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
வடக்கு இலங்கை நகரான பேசாலையிலிருந்து தமிழகத்திற்று அகதிகளாக வந்துள்ள இந்த 11 பேரும் ஐந்துகுடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை-தலைமன்னாரில் ஒரு படகைப் பிடித்து இந்த அகதிகள் வந்து சேர்ந்தனர். ஆனால் ராமேசுவரத்திற்குஅருகில் உள்ள ஒத்தப்பேட்டை என்ற இடத்திலேயே இந்த 11 அகதிகளையும் இறக்கி விட்டு படகுக் காரர்கள்திரும்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து, அந்த அகதிகள் இந்தியக் கடற்படையினரால் தனுஷ்கோடிக்குக் கொண்டுவரப்பட்டு, பின்னர்அங்கிருந்து மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
போலீஸ் விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகு அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
Comments
Story first published: Sunday, November 18, 2001, 5:30 [IST]