பெர்னாண்டஸ் பதவி விலகக் கோரி காங்கிரஸ் போராட்டம்
சென்னை:
பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி விலகக் கோரியும், பொடோ சட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்தும் சென்னையில் இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் எம்.எல்.ஏ. யசோதா தலைமையில் பொடோ சட்டத்திற்குஎதிர்ப்புத் தெரிவித்தும், ஜார்ஜ் பெர்ணான்டஸை மீண்டும் அமைச்சராக்கியதை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம், முன்னாள் எம்.பிக்கள் அடைக்கலராஜ், அன்பரசுஆகியோர் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தெஹல்கா விவகாரம் தொடர்பான முழுவிசாரணை முடியும் வரை ஜார்ஜ் பெர்ணான்டஸ் எந்த பதவியையும்வகிக்கக் கூடாது என்றும், தற்போது அவர் வகித்துவரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் பொடோ சட்டத்திற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.