For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாத்திமா பீவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:

ஜெயலலிதாவை முதல்வராக நியமித்த தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவியை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழக முன்னாள் கவர்னர் பாத்திமா பீவி கடந்த மே மாதம் ஜெயலலிதாவுக்கு தமிழக முதல்வராகப்பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் பதவி நியமணம் செல்லாது என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டபோதிலும் தான் செய்தது சரிதான் என்று பாத்திமாபீவி கூறினார்.

இதையடுத்து நீதிமன்றத்தை பாத்திமா பீவி அவமதித்துவிட்டதாகவும், ஜெயலலிதாவை பாத்திமா பீவி முதல்வராகநியமித்தது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில்பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்புவிசாரணைக்கு வந்தது. நாளிதழ் செய்திகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதால் விசாரணைக்குத்தகுதியற்றது என்று கூறி இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X