For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் கேசட்டை முதல்வரிடம் கொடுத்தார் நெற்றிக்கண் மணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சந்தனக் கடத்தல் வீரப்பன் அனுப்பியதாகக் கூறப்படும் கேசட்டை தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்திடம்நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் மணி இன்று ஒப்படைத்தார்.

சந்தன வீரப்பன் தனக்கு பொது மன்னிப்பு வழங்கினால் சரணடையத் தயார் என்றும், அதற்கு முன்பு காட்டிற்குள்உள்ள கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படையை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறி ஒரு ஆடியோ கேசட்அனுப்பியுள்ளான்.

அந்தக் கேசட் கடந்த 7ம் தேதி ரகசியமான முறையில் நெற்றிக்கண் வாரஇதழ் ஆசிரியர் ஏ.எஸ்.மணிக்குஅனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கடந்த சனிக்கிழமை அன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

ஆனால் தமிழக அரசும் கர்நாடக அரசும் காட்டில் உள்ள தங்களது அதிரடிப்படைகளை வாபஸ் பெற மறுத்துவிட்டன.

மேலும் வீரப்பன் சரணைடய விரும்பினால் ஏதாவது ஒரு காவல் நிலையத்திலோ அல்லது கோர்ட்டிலோசரணடையலாம் ஆனால் பொதுமன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்கூறிவிட்டார். கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் வீரப்பன் அந்தக் கேசட்டில் கேட்டுக்கொண்டுள்ளபடி, முதல்வரைச் சந்தித்து அந்தக் கேசட்டை இன்று(செவ்வாய்க்கிழமை) மணி ஒப்படைத்தார்.

பின்னர் வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் மணி கூறுகையில், கேசட்டை பெற்றுக் கொண்ட முதல்வர்பன்னீர்செல்வம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தானாக சரணடைய வீரப்பன் முன் வந்துள்ளான்.இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன் என்றார்.

பின்னர் முதல்வர் பன்னீர் செல்வம் இதுகுறித்துக் கூறுகையில், கர்நாடக அரசுடன் கலந்து ஆலோசித்த பின்னர்கேசட் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X