கிரிக்கெட்: டிராவில் முடிந்தது 2வது டெஸ்ட்
போர்ட் எலிசபெத்:
இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் டிராவில்முடிவடைந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்சைத் துவங்கிய இந்திய அணி மிக மோசமாக விளையாடி, 201 ரன்களுக்குஆட்டமிழந்தது. வி.வி.எஸ். லட்சுமண் மட்டும் அதிகபட்சமாக 89 ரன்களை எடுத்திருந்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஐந்து விக்கெட்டுகளைஇழந்து 233 ரன்களை எடுத்து டிக்ளர் செய்தது தென் ஆப்பிரிக்கா.
ஒரு நாள் மட்டுமே மீதமிருக்கையில் 395 ரன்கள் என்ற கடுமையான இலக்கை நோக்கி இந்திய அணியினர்இரண்டாவது இன்னிங்சைத் துவங்கினர்.
ஆனாலும் அனைவரும் எதிர்பார்த்தது போலவே மேட்ச் டிராவில் முடிவடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 206ரன்களை மட்டுமே எடுத்திருந்த இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இந்திய அணியில் அதிக பட்சமாக ராகுல் டிராவிட் 87 ரன்களும், தாஸ் குப்தா 63 ரன்களும் எடுத்தனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து, டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா முன்னணியில் உள்ளது.