For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய-தெ.ஆப்பிரிக்க அணிகளுக்குத் தடை வருமா?

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலுக்கு எதிராக தன்னிச்சையாக விளையாடிவருவதையடுத்து இரண்டு அணிகளும் தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேப்டன் சவுரவ் கங்குலி உள்ளிட்ட 6 இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குதென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் ரெப்ரீயாக இருக்கும் மைக் டென்னஸ் தண்டனை வழங்கியுள்ளார்.

இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், மைக் டென்னசை போட்டியிலிருந் நீக்கவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு(ஐ.சி.சி) வேண்டுகோள் விடுக்கப்பட்டது

இதற்கு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டும் ஆதரவு தெரிவித்தது.

ஆனால் இதற்கு ஐ.சி.சி சார்பில், டென்னஸ் கிரிக்கெட் விதிமுறைப் புத்தகத்தில் உள்ளவற்றைத் தான்பின்பற்றியுள்ளார். எனவே அவரை நீக்க முடியாது என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் டென்னசை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலான டெனிஸ் லிண்டே என்ற தென் ஆப்ரிக்க முன்னாள்கேப்டனை ரெப்ரீயாக நியமித்து, இரு அணிகளும் இன்று மூன்றாவது டெஸ்டை ஆடிக்கொண்டிருக்கின்றன.

இரு அணிகளும் கூட்டாக எடுத்துள்ள இந்த முடிவு ஐ.சி.சி.யின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் எடுக்கப்பட்டஒழுங்கீனமான முடிவு என்று லண்டனில் இந்து வெளியாகும் "தி டெலிகிராப்" என்ற பத்திரிக்கை தெரிவிக்கிறது.

இதேபோல "தி கார்டியன்" பத்திரிக்கையில், இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் ஐ.சி.சி. நியமித்த ரெப்ரீயை நீக்கிஅவமதித்தால், இரு அணிகளும் தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இருப்பினும் பல பத்திரிக்கைகள் டென்னசின் முடிவை "அராஜகம்" என்று வர்ணித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X