டென்னஸ் இல்லாமல் விளையாட இந்திய-தெ.ஆ. முடிவு
கொல்கத்தா:
இனவெறியுடன் நடந்து கொண்ட நடுவர் டென்னசை விலக்கிவிட்டு மூன்றாவது டெஸ்ட் மேட்ச்சைத் தொடரஇந்திய மற்றும் தென்ஆப்ரிக்க அணிகள் முடிவு செய்துள்ளன.
தென் ஆப்ரிக்கா எதிர்ப்பு:
இந்நிலையில் இந்திய வீரர்கள் மீது டென்னஸ் நடவடிக்கை எடுத்திருப்பது கிரிக்கெட் மீது உள்ள ஆர்வத்தைக்குறைத்து விடும். எங்களுக்கு இந்தியாவுடன் உள்ள உறவுதான் முக்கியம் என்று தென் ஆப்ரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கோண்டே பால்போர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) எழுதிய கடித்தத்தில்கூறியுள்ளார்.
இதை இந்தியக் கிரிக்கெட் நிர்வாகம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.
மேலும் இரண்டு அணிகள் சார்பாக, மைக் டென்னசை போட்டியிலிருந் நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலுக்கு(ஐ.சி.சி) வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு ஐ.சி.சி சார்பில், டென்னஸ் கிரிக்கெட் விதிமுறைப் புத்தகத்தில் உள்ளவற்றைத் தான்பின்பற்றியுள்ளார். எனவே அவரை நீக்க முடியாது என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
டெனிஸ் லிண்டே புதிய ரெப்ரீ:
இதையடுத்து இந்திய-தென் ஆப்ரிக்க நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து, மைக் டென்னசைமூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரெப்ரீ பதவியில் இருந் நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு டெனிஸ் லிண்டேஎன்பவரை புதிய ரெப்ரீயாக றியமித்துள்ளது.
இவர் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
ஐ.சி.சி. ரெக்கார்டுகளில் இடம்பெறாது:
இன்று ஜோகன்னஸ்பெர்க் நகரில் துவங்கவிருக்கும் இந்த டெஸ்ட் போட்டியை, ஐ.சி.சி. ஒரு சர்தேச போட்டியாகஅங்கீகரிக்காது என்று கூறிவிட்டது. மேலும் இந்தப் போட்டியின் முடிவுகள் மற்றும் வீரர்கள் செய்யும் சாதனைகள்எதுவும் ஐ.சி.சி.யின் குறிப்பேட்டில் இடம்பெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.