"பொடோ"வை எதிர்க்கிறார் கண்ணப்பன்
சென்னை:
"பொடோ" சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் மனித உரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதால் மக்கள் தமிழ்தேசம் கட்சி அதை எதிர்க்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கண்ணப்பன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
மத்திய அரசு புதிதாக அமல்படுத்த முயலும் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் (பொடோ) குறிப்பிடப்பட்டுள்ள சிலபிரிவுகள் மனித உரிமைகளைப் பாதிக்கும் விதத்தில் உள்ளது. இதனால் எங்கள் கட்சி அச்சட்டம்அமல்படுத்தப்படுவதை எதிர்க்கிறது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் குறுகிய காலத்தில் புதிய கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம்.காங்கிரசுடன் சேர்ந்து போட்டியிட்டது எங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொடுத்துள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துபோட்டியிட்டால், எங்கள் கட்சிக்கு தேசி யஅளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும்.
இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.