சென்னையில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம்
சென்னை:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குத் தண்டனையளித்த நடுவர் மைக் டென்னசுக்கு எதிராக சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனப் போராட்டம் நடத்தினர்.
சச்சின் டெண்டுல்கர், கேப்டன் செளரவ் கங்குலி உள்ளிட்ட 6 வீரர்களுக்கு எதிராக நடுவர் அளித்துள்ள இந்தத்தண்டனை கிரிக்கெட் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தண்டனையைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் ரசிகர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள், "மைக் டென்னஸ் டெளன்-டெளன்" என்பதுபோன்ற கோஷங்களை எழுப்பினர்.
இனவெறி காரணமாகவே மைக் டென்னஸ் இந்தத் தண்டனையை அளித்துள்ளதாகவும் கூறி கிரிக்கெட் ரசிகர்கள்கோஷமிட்டனர்.
ஆறு கிரிக்கெட் வீரர்களிடமும் மைக் டென்னஸ் மன்னிப்புக் கேட்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்நடத்தப் போவதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்தனர்.